சிகிச்சை முறைகள்:
மனச்சிதைவு போன்ற ஒரு சில தீவிரமான வியாதிகளுக்கு மட்டும்தான் தொடர்ந்து மாத்திரைகள் (Medicines) எடுத்துக் கொள்ள வேண்டும் (சர்க்கரை மற்றும் ரத்தக்கொதிப்பு போன்ற வியாதிகளில் மாத்திரை எடுத்துக் கொள்வது போல), மற்றபடி பிறவியாதிகளில் குறிப்பிட்ட காலம் வரை (மூன்று மாதம் முதல் இரண்டு வருடம் வரை) எடுத்துக் கொண்டாலே போதும். அவரவருடையை வியாதிகளின் தன்மைகேற்ப அவருடைய ஆளுமையின் முன்னேற்றம் மூலமாகவோ (Psycho Therapy) மற்றும் வாழ்வியல் முன்னேற்றம் மூலமாகவோ (Life Style Modifications) மாத்திரைகளை விரைவில் குறைக்கவும், நிறுத்தவும் முடியும். இந்த மாத்திரைகள் எல்லாம் 25 வருட ஆய்வுக்கு (Drug Trials) பிறகு பாதுகாப்பானது என்று உறுதி செய்யப்பட்ட பிறகே உரிமை (FDA Licensing) கொடுக்கப்பட்டு மருத்துவர்களின் பயன்பாட்டிற்கு வருகிறது. ஆகையால் மாத்திரைகளை பற்றிய
சந்தேகங்களை மருத்துவரிடம் நேரிலே தெரிந்துக்கொள்வதே சிறந்தது.
மின் அதிர்வு சிகிச்சை : (Electro Convulsive Therapy)
இது கடந்த 70 வருடங்களுக்கும் மேலாக உலகம் முழுவதும் தீவிரமான மன வியாதிகளிலும், சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு பிற மன வியாதிகளிலும் வெற்றிகரமாக பயன்படுத்தப் பட்டு வருகிறது. இச்சிகிச்சை முற்றிலும் வலியற்றது. இருப்பினும், மூட நம்பிக்கையினால் மக்களிடையே இது சரிவர பயன்படுத்தப்படாததால் மயக்க மருந்து கொடுத்து மின் அதிர்வு கொடுக்கும் புதிய முறையை (Modified ECT) அரசு அங்கீகரித்துள்ளது. இச்சிகிச்சையில் மின்சாரம் மிகவும் குறுகிய அளவும் (50mv - 80 mv) காலமும் (0.3 – 3sec) கொடுக்கப்படுகிறது. மொத்தத்தில் 8 முதல் 16 முறைகள் (ஒருமுறைக்கு ஒருநாள் இடைவெளிவிட்டு) கொடுக்கப்படுகிறது. இச்சிகிச்சையின் போது (ஒன்று முதல் மூன்று வாரங்கள்) தற்காலிக ஞாபகமறதி ஏற்படும் (Transient Memory Disturbance) இது சிகிச்சைக்கு பிறகு சரியாகிவிடும் (Reversible). மாத்திரைகள், மின் அதிர்வு சிகிச்சைகள் தவிர்த்து பெருபான்மையான வியாதிகளில்
பல்வேறு மனவியல் சிகிச்சை முறைகளும் (Psycho Therapies) ஆலோசனைகளுமே (Counseling) வழங்கப்படுகிறது.
குடிபோதை மீட்பு : (De – Addiction)
உலக சுகாதார நிறுவனம் (WHO) குடிபோதையை ஒரு மன நோயாக வரையறுத்துள்ளது. இதை வியாதியாக உணராமல், குடிபோதையை வெறும் தீய பழக்கமாக எண்ணி – கண்டிப்பதன் மூலமாகவும், அடைத்து வைப்பதன் மூலமாகவும், மந்திரித்த கயிறு, தாயத்து, கடவுளுக்கு நேர்ந்து கொள்ளுதல் மற்றும் சத்தியம் வாங்குதல் மூலமாகவும் குடியை கட்டுப்படுத்த பெரும்பாலோனோர் முயற்சி செய்கின்றனர். இதன் மூலம் சிறிது காலம்தான் குடியை கட்டுப்படுத்த முடிகிறதே தவிர, மீண்டும் முழுவீச்சுடன் நோயாளி குடிக்க ஆரம்பித்துவிடுகிறார். இவ்வியாதியின் மூலம் உடல், மனம், குடும்பம், வேலை மற்றும் சட்டரீதியாகவும் பாதிப்புகள் உண்டாகின்றன. ஆதாரத்துடன் கூடிய விஞ்ஞான பூர்வமான சிகிச்சை முறையே இதற்கு நிரந்தர தீர்வு. மருத்துவ ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும், குடும்ப, வேலை மற்றும் சமுதாய ரீதியாகவும் ஒருவரிடம்
படிப்படியான மாற்றத்தை சிகிச்சையின் மூலம் ஏற்படுத்தி மறுவாழ்வு கொடுக்க 8 முதல் 12 வாரங்கள் வரை (De – Addiction Protocol) தேவைப்படுகிறது. குடிபோதையை கட்டுப்படுத்துவது வைத்தியமாகாது – நிரந்தரமாக மீட்டெடுப்பதே தீர்வாகும்.
Todays Thought
News & Events
29/04/2018
Full Moon Day - Free mental
health awareness camp
at girivalam path
Contact us
Appa Mental Health Facility,
36, Muthuvinayagar kovil street,
Railway station road,
Tiruvannamalai-606601.
Telephone:+91 9944455208
+91 9487712953,+91 9487712952
+91 6383515187,+91 9488676839
E-mail: appahospital@gmail.com